- Back to Home »
- பழங்களும் அதன் நன்மைகளும் »
- பழங்கள்
Posted by :
ஆனந்த் சதாசிவம்
Wednesday, August 7, 2013
பழங்களும் அதன் பலன்களும் பற்றி மூன்று பதிவுகள்
படித்திருப்பீர்கள் இது நாலாவது பாகம் .
நாரத்தம் பழம்:-
இரத்த விருத்தி உண்டாக்கும்.உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
பித்தம் போக்கும்.
தர்பூசணி பழம் :-
உடலுக்குக் குளிர்ச்சி தரும்.சூடு தணியும்.தாகம் தீர்க்கும்.பழமும்
விதையும் சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். கல்லீரல்,மூளை
பலம் பெறும்.சிறிது பித்தம் உண்டாக்கும்.
சாத்துக்குடி பழம்:-
இரத்த உற்பத்தி,உடல்பலம்,அறிவுத்தெளிவு உண்டாக்கும்.
சீத்தாப்பழம் :-
உடல்பலம், இருதய பலம் உண்டாக்கும்.ஜீரண சக்தியைக்
குறைத்து விடும் .சிறிது பித்தம் உண்டாக்கும்.
சப்போட்ட பழம்:-
உடலுக்கு நன்மை தரும்.சிறிது பித்தத்தை உண்டு பண்ணும்.
சீமை இலந்தைப் பழம் ;-
விரை வாதத்தை நீக்கும்.
மாதுளம்பழம் :-
அறிவு விருத்தி,ஞாபகசக்தி உண்டாக்கும்.உடல் சூடு
சமநிலைப்படும். இருமல் நீங்கும்,தொற்று நோய் கிருமிகளை
அழிக்கும்.புற்று நோயைத் தடுக்கும்.மலச்சிக்கல் தீரும்.
தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை நீங்கும்.
விளாம்பழம் :-
சுவாச கோசத்தைச் சுத்தபடுத்தும்.
சொறி,சிரங்கு ஆறும்.
சிறுவர்க்கு நல்ல நினைவாற்றலை கொடுக்கும்.
இலந்தைப்பழம்:-
இரத்தத்தை சுத்தம் செய்யும்.
வாந்தி,கை,கால் வலிகள் நீங்கும்.
பித்த மயக்கம் தீரும்.
அத்திப்பழம் :-
புதிய இரத்தம் உற்பத்தி ஆகும் .
அத்திப்பழ விதையை உலர்த்தித் தூள் செய்து தேனில்
குழைத்து சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும்.
.
முலாம்பழம் ;-
மலச்சிக்கல் தீரும்.